Header image alt text

04.02.1988 இல் வவுனியா முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் ராமர் (ஜெயா), ஞானம் (விஜயேந்திரன்), ரவி ராஜன், ஜீவராஜா, செல்டன்(ரெலா), ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் பாரத்தை இலங்கை தொடர்ந்து உணர்கிறது. இந்தநிலையில் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை ஒவ்வொரு இலங்கையர்களும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்று பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இலங்கை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை உணர்கிறது என்பதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டார். Read more

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தின் சில பகுதிகளில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. Read more

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் அதனை தொடர்ந்தும் பேணவும் எதிர்பார்ப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். Read more