Header image alt text

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் அவர்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். Read more

ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் பாரிய அழிவுக்கு உள்ளான மக்களுக்கு நீதி வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். Read more

ஒரு கிலோகிராம் நெல்லை 100 ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(12) நடைபெற்ற நெல் அறுவடை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். கிளிநொச்சி – பரந்தன் வயல்வெளியில் விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி, விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். Read more

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரியே எழுத்து மூல கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. Read more