Header image alt text

19.02.2016இல் மரணித்த யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையிலும், அதன் பின்னர் காந்தீயம் அமைப்பிலும் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த இவர் அதன் பின்னர் கழகத்தின் அரசியல் பிரிவில் அதன் ஆரம்ப காலம் தொட்டு தீவிர செயற்பாட்டாளராக தொடர்ச்சியாக இயங்கி வந்தார்.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி முன்பாக அமைந்துள்ள குழாய்க்கிணறு பழுதடைந்தமையால் அதனை திருத்தித் தருமாறு பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கோரிக்கையை ஏற்று வவுனியா நகரசபையினால் குழாய் கிணறு திருத்தப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது. Read more