Header image alt text

25.02.1985இல் மரணித்த தோழர் சிவாஜிகணேசன் (மகாலிங்கம்- புதுக்குடியிருப்பு) அவர்களின் 38ஆம் ஆண்டுநினைவு நாள் இன்று….

உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியினால் தலவாக்கலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துககொண்டனர். Read more

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று (24) பிற்பகல் கடிதத்தை அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.  இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, குறித்த கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறினார். Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. Read more