Header image alt text

மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில், இந்த திகதிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். Read more

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று (07) நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை  பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் 04 சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பகல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்புப் பொதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். Read more