இன்றைய தினம் (12.3.2023) வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு திருமதி அன்ரன் வரதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திருமதி ரசிக்கா, அமுத சுரபிஅறக்கட்டளை தலைவர் மேழிகுமரன், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், அம்மன் ஆலயத் தலைவர் கனகரத்தினம், முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டதோடு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.