Header image alt text

அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை கிராமத்தில் உள்ள பிரபல நான்கு விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றிணைந்து பிரதேசத்தில் நிகழும் மரண வீடுகளுக்கு இலவசமாக கூடாரங்களை வழங்குவதற்காக கூடாரங்களை தந்துதவமாறு கழகத்தின் அம்பாறை மாவட்ட நிர்வாகத்திடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு இணங்க பிரித்தானிய கிளை தோழர்கள் சோபிதன் ஊடாக ரூபா 100,000, தயாமயூரன் ஊடாக ரூபா 50,000 என மொத்தம் 150,000 ரூபாவில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மேற்படி கூடாரங்கள் இன்று (19.03.2023) வழங்கிவைக்கப்பட்டன.

Read more

ஜேர்மனியில் வசிக்கும் திருமதி தர்மினி சிவகுமாரன் அவர்களின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் ஜெர்மன் கிளையின் அனுசரணையில் 50,000/- நிதியில் முல்லைத்தீவு (ரெட்பானா) வள்ளுவர்புரம் மகளிர் அமைப்புக்கு சுழற்சி முறைக் கடன் திட்டத்தின் அடிப்படையில் நிதியுதவியும், வள்ளுவர்புரம் கார்த்திகா முன்பள்ளியினுடைய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடக இன்று (19.03.2023) வழங்கிவைக்கப்பட்டன.

Read more

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். Read more

340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று((19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று(19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. Read more

திருகோணமலை – கோமரங்கடவல, திம்பிரிவெவ மற்றும் கிரிந்த பலாட்டுபான பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த நில அதிர்வுகள் நாட்டின் அனைத்து நில அதிர்வு மானிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார். Read more