அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை கிராமத்தில் உள்ள பிரபல நான்கு விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றிணைந்து பிரதேசத்தில் நிகழும் மரண வீடுகளுக்கு இலவசமாக கூடாரங்களை வழங்குவதற்காக கூடாரங்களை தந்துதவமாறு கழகத்தின் அம்பாறை மாவட்ட நிர்வாகத்திடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு இணங்க பிரித்தானிய கிளை தோழர்கள் சோபிதன் ஊடாக ரூபா 100,000, தயாமயூரன் ஊடாக ரூபா 50,000 என மொத்தம் 150,000 ரூபாவில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மேற்படி கூடாரங்கள் இன்று (19.03.2023) வழங்கிவைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் ப.ரவிச்சந்திரன்(சங்கரி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
கட்சியின் துணைத் தலைவர் தோழர் பொ.செல்லத்துரை(கேசவன்), கட்சியின் சமுக மேம்பாட்டு பிரிவப் பொறுப்பாளர் தோழர் ந.ராகவன்(வரதன்) கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), கட்சின் அம்பாறை மாவட்ட செயலாளர் தோழர் ப.நாகராஜா (கங்கா), கட்;சியின் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளர் கணேஸ்,
விபுலானந்தா விளையாட்டுக் கழகம் சார்பாக சுசிகரன், குவேந்திரன், கணபதிபுரம் முருகன் விளையாட்டுக் கழகம் சார்பாக லக்ஸன், நிதர்சன், சூப்பர் ஹீரோ விளையாட்டுக் கழகம் சார்பாக பிரபு, சிந்துஜன், அப்பிள் விளையாட்டுக் கழகம் சார்பாக சஞ்சய், அஜய் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.