நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையிடமுள்ள டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மூலம் மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதனால் எக்காரணத்திற்காகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.