உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்குமாறும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவுஸ்திரேலிய – இலங்கை சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.