சலுகைகள் மற்றும் அமைச்சுப் பதவிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், தற்போதைய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசாங்க தரப்பினர் பரப்பும் போலியான தகவல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தை விட மோசமான பாதாளத்திற்கு நாட்டைத் தள்ளுவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விரைவில் இந்த அரசாங்கத்தின் தோல்வி அம்பலமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

தேர்தலின்றி எமது நாட்டை இந்த துரதிஷ்டமான நிலையில் இருந்து மீட்க முடியாது என்பதை தாம் உறுதியாக நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்