06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகளில் முனைப்புக்காட்டிய இவர், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்ப்பதற்கு அயராது பாடுபட்டதோடு, கழகத்தின் ஊடாக பல உதவிகளையும் அம்மக்களுக்கு செய்து வந்தார்.