நாட்டில் விரைவில் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கும் போது, அதனை ஆட்சியை பொறுப்பேற்க எதிர்பார்த்துள்ள அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.

அவர்கள் செய்யும் சேவையின் ஊடாக அதனை நிலைநாட்ட வேண்டும். மக்கள் ஆணை இல்லாமல் தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது. நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஒன்றிணைந்து இந்த நாட்டின் பாரிய கூட்டணி ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.