சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு  வருகை தந்துள்ளனர். இன்று(11) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசனும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் முதலாவது மீளாய்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வழமையான ஆலோசனைகளின் ஓர் அங்கமாக சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய பணிக்குழுவின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளனர்.