Header image alt text

12.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர்கள் தாஸ் (செல்லத்துரை சாந்தகுமார்), விந்தன் (தம்பிராஜா துரைராஜா), சாந்தன் (சின்னத்தம்பி சிவநேசன்), ஜூலி (செல்லத்தம்பி பத்மசீலன்), லோரன்ஸ் ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினமும் தொடரவுள்ளது. இந்தச் சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. நேற்றைய தினம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை

Read more

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு 27ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.