Header image alt text

14.05.1998இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கார்த்திக் (மாசிலாமணி ஜீவதாஸ்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும்(14). ஒவ்வொரு வருடத்திலும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகமே இன்று அன்னையர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, எமது நாட்டில் 6215 தாய்மார் முதியோர் இல்லங்களில் வசிப்பதாக தேசிய முதியோர் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் போதும் பணி முடித்து திரும்பும் போதும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வது நாளை(15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை நாளை(15) முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.