அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் போதும் பணி முடித்து திரும்பும் போதும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வது நாளை(15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை நாளை(15) முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.