புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹனதீர நியமிக்கப்பட்டுள்ளார்.  எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற பணிக்குழாமின் பிரதானியாகவும், பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளராகவும் குஷானி ரோஹனதீர கடமையாற்றியுள்ளார்.