Header image alt text

தாயகக் குரல்

Posted by plotenewseditor on 17 May 2023
Posted in செய்திகள் 

பேச்சுகள் தொடரும், ஆனாலும் பலன் கிடையாது?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்பேசும் நாடாளுமன்ற பிரிதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு கட்டமான பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட தமிழ் தரப்பினர் தோற்றுப் போய்விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அதேபோல் பேச்சுக்களை புறக்கணித்தவர்கள் வென்றுவிட்டார்கள் என்று சொல்வதற்குமில்லை. ஏனெனில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுக்கள் ஒரு நீண்ட செயற்திட்டத்தின் ஆரம்பமுமல்ல. தேசிய இனப்பிரச்சினைக்களுக்கான பேச்சுகளின் முடிவுமல்ல.

Read more

போராட்ட குழுக்கள் மீது கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று முழுமையாக நீக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது. Read more

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், Read more