மலர்வு 21.02.1940
உதிர்வு 17.05.2023
வவுனியா பண்டாரிகுளத்தை பிறப்பிடமாகவும் சாஸ்திரிகூழாங்குளத்தை வாழ்விடமாகவும், உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பரமேஸ்வரி அவர்கள் நேற்று (17.05.2023) புதன்கிழமை காலமானார்.

இவர் அமரர் தோழர் வை.திருச்செல்வம்(சந்திரன்), தோழர் தமிழ்ச்செல்வி(உமா), கழகத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் தோழர் திருவருட்செல்வம் (மூர்த்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும், அமரர் தோழர் குணரத்தினரம்(வினோ) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
“தன் பிள்ளைகளுடன் சேர்த்து
எம் தோழர்களையும் காத்து
உணவளித்து உறங்கவைத்து
ஆதரவளித்த ஆன்மா
அமைதிபெற பிரார்த்திக்கிறோம்”
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு:
அன்னையின் உடல் அஞ்சலிக்காக உக்குளாங்குளம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (21.05.2023) காலை 10.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
தொடர்புகட்கு :
மூர்த்தி (077) 608 2022