Header image alt text

21.05.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குமாரப்பெருமாள் பேரின்பம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய பிரித்தானிய அரசாங்கம் செயற்படவேண்டும். அத்துடன் இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். Read more

நாட்டில் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.