வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட P.S.M.சார்ள்ஸ் தனது கடமைகளை இன்று(22) பொறுப்பேற்றார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட P.S.M.சார்ள்ஸை வரவேற்கும் நிகழ்வொன்று வவுனியாவில் இன்று(22) நடைபெற்றது. வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா நகர சபையின் அருகிலிருந்து A9 வீதியூடாக அவர் வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டார்.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அலுவலுகத்திற்குச் சென்ற P.S.M. சார்ள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், S.நோகராதலிங்கம், வட மாகாண அவைத் தலைவர் C.V.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.