06.11.1988 அன்று இந்து சமுத்திரத்தில் மரணித்த தோழர்கள் நிதி (சோமசுந்தரம் சந்திரபாலன் – நெடுந்தீவு), பாப்பா (முல்லைத்தீவு), கோபி (சங்கானை) சின்னசங்கர் (முல்லைத்தீவு), குமார் (தும்பளை பருத்தித்துறை) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 6 November 2023
Posted in செய்திகள்
06.11.1988 அன்று இந்து சமுத்திரத்தில் மரணித்த தோழர்கள் நிதி (சோமசுந்தரம் சந்திரபாலன் – நெடுந்தீவு), பாப்பா (முல்லைத்தீவு), கோபி (சங்கானை) சின்னசங்கர் (முல்லைத்தீவு), குமார் (தும்பளை பருத்தித்துறை) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 6 November 2023
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் மூன்றை நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று(6) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, அதாவுல்லா, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பலர் கலந்துக் கொண்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 6 November 2023
Posted in செய்திகள்
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.