Header image alt text

திருகோணமலை – மொரவெவ பிரதேசத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 3.4 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று(12) பிற்பகல் 1.15 க்கு இந்த  நில அதிர்வு பதிவாகியுள்ளது. கந்தளாய், மொரவெவ, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

12.11.1987 இல் செட்டிகுளம் கல்லாற்று பாலத்தருகில் மரணித்த தோழர்கள் பேர்னாட் (பருத்தித்துறை), கருணாகரன் (பள்ளிமுனை), சேகர் (மண்டான்), தமிழ்த்தம்பி (தி.இராசரத்தினம்- சுழிபுரம்), கரன் (சு.திருநாவுக்கரசு- ஸ்கந்தபுரம்), யோகன் (ஆட்காட்டிவெளி), பிரதிகரன் (கச்சாய்), ஞானராஜ் (ப.மோகன் – பன்குளம்), றமணன் (கனகரட்ணம் – யோகபுரம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

கொழும்பு பேர வாவிப் பகுதியினை ஒரு முக்கிய பொழுதுப்போக்கு இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் கிளார்க் குவே நதியில் உள்ள கேளிக்கை உணவு விநியோகம் மற்றும் சர்வதேச தரத்தை கொண்ட பொழுதுப்போக்கு நடவடிக்கைகள் பேர வாவியில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.