Header image alt text

‘குயின் எலிசபெத்’ என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் நாட்டுக்கு வருகைத்தந்த நான்காவது கப்பல் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின் எலிசபெத்’ கப்பலில் 1,930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த கப்பல் இன்று இரவு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி குருமண்வெளியில் வசித்து வருபவரும், 1992இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரகுவரன் (க.வரதராஜா) அவர்களின் தாயாருமான கணபதிப்பிள்ளை தங்கரெத்தினம் அவர்களின் வீட்டிற்கு புதிதாக மின்சார இணைப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு வவுனியாவைச் சேர்ந்த தற்போது கனடா டொரன்ரோவில் வசித்து வரும் திரு. சார்ள்ஸ் ஜோசெப் (ஆரத்தி சுப்பர் சென்டர் உரிமையாளர்) குடும்பத்தினரால் ரூபா 52,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Read more

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரமாணக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிகாரே, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்மானம்  அறிவிக்கப்பட்டுள்ளது. Read more