‘குயின் எலிசபெத்’ என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் நாட்டுக்கு வருகைத்தந்த நான்காவது கப்பல் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின் எலிசபெத்’ கப்பலில் 1,930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த கப்பல் இன்று இரவு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.