
தோழர் ரகுவரன் அவர்களின் தாயார் இதுவரை காலமும் மின்சார வசதியின்றி தனியாக வசித்து வந்த நிலையில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று (14.11.2023) மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி செயலாளர் முரளி, கட்சியின் உபதலைவர் தோழர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்வுதவியை வழங்கிவைத்தனர்.




