ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தமிழ் மக்களே பாதிப்புக்குள்ளாவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.