இலங்கை தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.