Header image alt text

02.09.1999ல் படுகொலை செய்யப்பட்ட, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் (நாகலிங்கம் மாணிக்கம் ராஜன் – யாழ்ப்பாணம்) மற்றும் தோழர்கள் இளங்கோ (தர்மலிங்கம்,தேவராஜா-புளியங்குளம்), வினோ (முருகேசு குணரத்தினம்- மட்டக்களப்பு) ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அன்னதானம் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலி இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Read more

தோழர்கள் மாணிக்கதாசன், இளங்கோ, வினோ ஆகியோரின் நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் இன்று வவுனியா வரோட் அமைப்பிலுள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டது. Read more

தோழர்கள் மாணிக்கதாசன், இளங்கோ, வினோ ஆகியோரின் நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் வவுனியா கோயில்குளம் நினைவில்ல வளாகத்தில் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது.

\ Read more

02.09.1985ல் கொல்லப்பட்ட தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், மானிப்பாய் தொகுதியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிDPLF) ஆகியவற்றின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இதயபூர்வ அஞ்சலிகள்-

Posted by plotenewseditor on 2 September 2024
Posted in செய்திகள்