Header image alt text

திருகோணமலையில் தமிழ்த் தேசிய பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றுமாலை இடம்பெற்றது. Read more

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். அடுத்த ஆண்டில் ஜனவரி 02 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். Read more

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது ​தொடர்பாக ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. Read more

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை விடுவிக்க வேண்டியிருப்பதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14.09.2014இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ராமையா (செல்லத்துரை தங்கராசா) அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..