Header image alt text

பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், தமது சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. Read more

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொதுக்கூட்டம் நேற்று (16.09.2024) யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க. அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.