Header image alt text

19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நாளைய தினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வாக்களிப்பு அலுவலகங்களையும் அகற்றுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகமும் பழைய ஆசனத்திற்கு ஒரு அலுவலகமும் மாத்திரமே திறக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார். Read more