இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா ஏதிலிகளை நாடுகடத்த வேண்டாம் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்த வேண்டாம் எனவும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.