இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (04 ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். போர்க்கப்பலானது 91.16 மீட்டர் நீளமும் 129 நிர்வாக குழுவினரையும் கொண்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஐயத்தின் போது INS KUTHAR கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு INS KUTHAR என்ற போர்க்கப்பல் எதிர்வரும் 06 ஆம் திகதி நாட்டை விட்டுப் புறப்படவுள்ளது.