எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேசபை, மாந்தை கிழக்குப் பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை ஆகிய சபைகளுக்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் புளொட் அமைப்பின் பொருளாளருமான கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் செலுத்தி வேட்புமனுப் பத்திரங்களை பெற்றுக் கொண்டார்.