Header image alt text

தேர்தலை இலக்காகக் கொண்டு தங்களது தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணையவில்லை எனத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். தற்போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Read more

வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (19) இலங்கைக்கு வருகை தந்தனர். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அழைப்பையேற்று அவர்கள் நாட்டை வந்தடைந்தனர். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 2023 ஆம் ஆண்டில் வேட்பு மனு கோரப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை வழங்காமையின் காரணமாகத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. மற்றவர்கள் மீதான நம்பிக்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக வருடாந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாகி கண்ட இடத்தில் கைது செய்யம்படி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் இன்று(19) முற்பகல் ஆஜரானார். அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைப்பதாக மாத்தறை நீதவான் உத்தரவிட்டார். Read more

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வாங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் இன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் நாளை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரினோவுக்கும்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நாடாளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. Read more

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை கைது செய்வதற்காகப் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றுடன் 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்னும் கைது செய்யப்படவில்லை. Read more

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ருக்தேவி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more