Header image alt text

We’re Giving Government Our Fullest Support – D. Sidharthan

by Thushari Nathaniel

sdfdfPLOTE leader and TNA MP D. Sidharthan says he has confidence in the current regime that it will deliver justice to the Tamil people. He said that even though the government has good intentions, they implement these mechanisms extremely slow, so the Tamil people are fast losing faith in the government. In an interview with The Sunday Leader he said that the passing of the Office of Missing Persons (OMP) Bill was also a good sign that the government is doing its best for the Tamil people. He, however, said that it is far too early to comment on this issue and time will prove the government’s sincerity.

Following are excerpts of the interview;

Q: OMP bill was passed Thursday without a vote. How confident are you that the OMP bill will ensure justice for the Tamil people?

A: What is more important is the implementation of the bill than passing it. Any bill can be passed but there is no purpose if it cannot be implemented. The efficiency and commitment of the commissioners is left to be seen. Only time will prove if OMP will be of any use. This we cannot decide at this juncture. We have to wait and see.

The implementation is the most important factor, and we must see who will be appointed to this commission and what powers will be given to them etc. The bill as it is now may contain some weaknesses; but TNA amendments and all, it’s a good start. The government has stepped in the right direction. As the co-sponsors of the UN resolution, they have started moving in the right direction. However, it’s too early to speculate. Read more

ஐ.நா அலுவலகம் நோக்கி நீதிக்கான நடைபயணம்-

walkingதமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை எதிர்த்தும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் ஐ.நாவை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து ஐ.நா செயலகம் வரை நடைபெற்றுள்ளது. திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்த சிலைகளையும் நிறுவி, இராணுவ பலத்துடன் தமிழர் தாயகத்தில் சிங்;களமயமாக்கலை எதிர்த்தும், இனத்தின் தனித்துவத்தை பாதுகாத்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கானதும், காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் ‘ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைபயணம்’ என்ற தொனிப்பொருளில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது. ஆனையிறவு உமையாள்புரம் ஆலயமுன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி வரை சென்று கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடைபவனியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக முன்னணி செயலாளர், அரசியல் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறப்பிடத்தக்கது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பத்தரமுல்லைக்கு இடமாற்றம்-

immigration deptமக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சு{ஹருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும். வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்துக்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச் சேவை என்பன ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெறும். அதேநேரம், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை இடம்பெறமாட்டாது. எனினும், ஓகஸ்ட் 26 இலிருந்து 29 வரையான திகதிகளில் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் துறைமுகச் செயற்பாடுகள் இயல்பான முறையில் நடைபெறும் என குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜயந்தி குருஉதும்பலவை உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக நியமிக்க தீர்மானம்-

jeyanthiபெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் என்ற அவரது சாதனையை கௌரவிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இவ்வருடம் ஆகஸ்ட் 19ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி வரை இவருக்கு இப்பதவி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக, ஜெயந்தி குருஉதும்பலவுக்கு, அமைச்சர் சந்திரானி பண்டாரவால் வழங்கிவைக்கப்படவுள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா நியமனம்-

laksman yapaசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சராவார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவே சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்தார். இந்தநிலையில் அவர், தான் பதவி விலகுவதாக கடந்த 19ம் திகதி அறிவித்த நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை-

namal (2)முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இரண்டு பேரையும், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளார். நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த திங்கட்கிழமை (15), சமுகமளித்து வாக்குமூலமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்திருந்தார். இதன்படி இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் நான்கில் சந்தேகநபர்களை விடுவித்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஹோமாகம ஆசன அமைப்பாளராக காமினி திலகசிறி நியமனம்-

sdssசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம ஆசன அமைப்பாளராக காமினி திலகசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேல் மாகாண சபை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார்.