Header image alt text

pranab-mugarji-ranilஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றுமாலை புதுடில்லியிலுள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பதாக இந்திய குடியரசுத் தலைவரிடம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more

antonio-goodrestபோர்ச்சுக்கல் நாட்டு முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

15 நாடுகளை அங்கமாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின், பொதுச்செயலர் பதவிக்கு அதிகாரப்பூர்வமில்லாத வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டு முன்னாள் பிரதமர் குட்டெரெஸ், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டாலினா ஜோர்ஜிவா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. Read more

ritaசிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதி நிதி (Rita Izsák-Ndiaye) ரீட்டா சுவைக் நதையே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி இவர் இலங்கையை வந்தடையவுள்ளார். நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வடக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். Read more

ranil-modiஇலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதற்கு இருநாட்டு பிரதமர்களும் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இடம்பெறும் பொருளாதார மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sdffgdfd“Wushu Sanda” சர்வதேச போட்டியில் இலங்கை சார்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் தெரிவாகியுள்ளதுடன், மேற்படி நான்கு பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவின் மணிப்பூருக்கு பயணமாகவுள்ளதாக “Wushu Sanda” பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த “Wushu Sanda” பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் உட்பட பாடசாலை மாணவர்களும் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். Read more

ajith nivatமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றுகாலை அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனம் ஒன்றின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அண்மையிலும் அவர் அங்கு ஆஜராகியிருந்தார்.

NPCவடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் இறுதிக்கிரியைகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொருட்டு, வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று ஆரம்பமானது. இதன்போது, அன்டனி ஜெகநாதனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more

nimal-leukeவிசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான, ஓய்வுப்பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் லெவிகே,

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.