Header image alt text

maithriஉத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்தின் பேங்கொக் நகரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்றையதினம் காலை 7.25 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.882 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்குப் பயணமாகியுள்ளார். தாய்லாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய ஒத்துழைப்பிற்கான கருத்தாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். Read more

ranilநியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கான விஜயங்களை முடித்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இரவு 10.20க்கு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

நியூசிலாந்துக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த பின்னர், பிரதமர் அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு பயணமானார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் என பலரையும் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். Read more

fausiஇராஜாங்க அமைச்சர் ஏ.எச.எம்.பௌசியை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சுக்கு சொந்தமான 1 கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜீப் வண்டியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ssஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஹற்றன் -கொழும்பு பிரதான வீதியை மறித்து செனன் சந்தியில் சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று முற்பகல் சம்பள போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது. Read more

suicideதூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று மட்டக்களப்பு கூழாவடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூழாவடி 8ஆம் குறுக்கை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான புண்ணியமூர்த்தி சக்திவேல் (31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

china-shipகொழும்பு துறைமுக நகருக்கான (போர்ட் சிற்றி) காணி மீள்நிரப்பல் வேலைகளில் ஈடுபடவுள்ள மூன்று மணல் அகழ்வு கப்பல்களில் முதலாவது கப்பல் சீனாவிலிருந்து கடந்த வியாழக்கிழமை கொழும்பு தெற்கு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மணல் அகழ்வு பிரதேச எல்லை அனுமதிப்பத்திரம் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் கருத்திட்ட நிறுவனமானது கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கான அனுமதிப்பத்திரத்துடன் இணங்குமாறு காணி மீள்நிரப்பல் வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல அனுமதிகளையும் ஒப்புதல்களையும் தற்போது கொண்டுள்ளது. Read more