Header image alt text

sdfdஇன்று சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள சுமார் 1.1 பில்லியன் பெண் பிள்ளைகளை வலுப்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை ஆரம்பித்தது.

பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு பெண் பிள்ளைகள் முகங்கொடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11 ஆம் திகதி இத்தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக “பெண்கள் முன்னேற்றம், இலக்குகளின் முன்னேற்றம், ஒரு உலகளாவிய பெண் தரவு இயக்கம்” அமைந்துள்ளது. Read more

doctroஅம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறாமகளும் மரணமடைந்துள்ளனர்.

மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Read more

palitha-fernandoபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

அவன்ற்கார்ட் மெரிடைம் நிறுவனத்திடமிருந்து 335 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. Read more

indian-shipஇந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான, சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று இந்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கும் இடையில், பரஸ்பர புரிந்துணர்வையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more

japanஇலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் 33 பில்லியன் யென் பெறுமதியான கடனை வழங்கியுள்ளது. இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் தற்போது முன்னெடுக்கப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்குமென இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

10 பில்லியன் யென், அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. Read more

sdfdfdfஇலங்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒன்றாக அமையும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், இலங்கை விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் சுவிஸ் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். Read more

arrest (9)மணற்காட்டுப் பகுதியில் இன்று 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ravirajமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கை ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரிப்பதற்கு அவரது உறவினர்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றபோதே அடிப்படை ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

dsssபதுளை நகரின் அருகில் காணப்படும் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காணப்படும் 40 வருடகால பழமையான குப்பை மேட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பதுளை நகரம் முழுதும் புகைமண்டல் சூழ்ந்தது. Read more

fireதிருகோணமலை மூதூர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் உயிரிழந்தவர் 25 வயதான பெண் மற்றும் 32 வயதான ஆண் ஒருவரும் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த இருவருக்கும் இடையில் தவறான தொடர்பிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. Read more