Header image alt text

D.Sithadthan M.P,.முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் ஐயப்பாடுகளை போக்கும் விதத்திலும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான உடன்பாடுகளை காண்பதற்காக அவர்களுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாகவுள்ளது என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை, புதிய அரசியல் அமைப்பைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழி நடத்தல் குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் அவரிடம் கருத்துக் கேட்டபோதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read more

dsc05102முல்லைத்தீவு மாவட்டத்தின் பாண்டியன்குளம் வள்ளுவர் விளையாட்டுக் கழகம் (கபடி), ஒட்டுசுட்டான் ஆதி கணபதி விளையாட்டுக் கழகம், முள்ளியவளை முல்லைக்குமரன் விளையாட்டுக் கழகம்,

குமிழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு 12.10.2016 செவ்வாய்க்கிழமை வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. Read more

gun shootingதிருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் பயணித்துக்கொண்டிருந்த வான்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில், நீதிமன்ற வீதியால் பயணித்துக்கொண்டிருந்த வானுக்குள் இருந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்ட பொலிஸார், வானை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கியுள்ளபோதும், வானின் சாரதி வானை நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோதே, பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Read more

jeyam-photoதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையின் மூத்த உறுப்பினரான தோழர் வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் அவர்கள் கடந்த 09ஆம் திகதி லண்டனில் மரணமான செய்திகேட்டு ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம்.

யாழ்ப்பாணம் கொக்குவிலை சொந்த இடமாகக் கொண்ட ஜெயபாலன் அவர்கள் லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாக கொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்திலே கழக செயற்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு லண்டன் கிளை ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டே அதில் இணைந்து செயற்பட்டு வந்தார். கழகத்தின் லண்டன் கிளை அங்கத்தவராகவும், பின்னர் அமைப்பாளராகவும் செயற்பட்டவர்.
Read more

kidnapping_2யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சி நகரில் வைத்து இனந்தெரியாத நபர்களால் நேற்று மதியம் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more

பத்திரிக்கை அறிக்கை

Posted by plotenewseditor on 13 October 2016
Posted in செய்திகள் 

bavanஅண்மையில் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினருக்கும் வடமாகாண கல்விச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட, வட மாகாண கல்வித்துறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் நீண்ட காலமாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளவையாகும். 
வடக்கு மாகாண சபை தனது மூன்றாண்டு காலத்தை பூர்த்தி செய்தபோதிலும் கல்வித்துறை வளர்ச்சிக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஒன்றை முன்மொழிய இதுவரையிலும் அதனால் முடியவில்லை என்பது கவலையான விடயம்.

Read more

ranilபல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து வெளியேறும் அனைத்து பட்டதாரிகளுக்கும் கட்டாயம் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். Read more

jeyam-photoஎமது கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் ஜெயம் 09.10.2016 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இயற்கையெய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (தோழர் ஜெயம்) அவர்கள்;, தமிழ் மக்களின் விடுதலைக்காக “புதியபாதை”யாக ஆரம்பிக்கப்பட்ட எமது கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தொடக்ககால உறுப்பினராக தமிழ் மக்களின் விடுதலைக்கான தனது பணியினை தொடங்கினார்.

பின்னர் நீண்டகாலமாக கழகத்தின் பிரித்தானிய அமைப்பாளராக இருந்த தோழர் ஜெயம் அண்மையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கழகத்தின் மத்திய செயற்குழு அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்டார். தோழர்களுடன் மிக அன்பாகவும் அன்னியோன்யமாகவும் பழகிய அதேநேரம் கண்டிப்பும் மிக்கவராக இருந்தமையால் அவர்பால் கழக தோழர்கள் மிகுந்த அன்பையும் மதிப்பையும் கொண்டிருந்தனர். Read more

aarpattam (2)தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகிய குறித்த பேரணி புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 13 October 2016
Posted in செய்திகள் 

dplf-uk-post-card-1