தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானிய கிளை அமைப்பாளரும், மத்திய செயற்குழு உறுப்பினருமான தோழர் ஜெயம் (வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன்) அவர்களின் இறுதி நிகழ்வு நேற்று (13.10.2016) லண்டனில் நடைபெற்றது.
அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. பிரித்தானிய மண்ணில் நீண்டகாலம் கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்த மூத்த தோழரின் இறுதி நிகழ்வில் லண்டனுக்கு வெளியே பல மைல்கள் தொலைவில் இருந்து கழக தோழர்கள் பலர் வந்து தமது இறுதி மரியாதையை செலுத்தியிருந்தனர். Read more