Header image alt text

hgggggயாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரும் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். Read more

policeயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவருகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விஷேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

களவு, கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த விஷேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பொலிஸ் பிரிவு எந்தவித சம்பவங்களையும் எதிர்கொள்ளும் விதமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read more

piyasenaதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவை தொடர்ந்து நவம்பர் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது பொருளாதார அமைச்சின்கீழ், முன்னாள் எம்.பி கே.கே.பியசேனவிற்கு வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் கடந்த 2வருடங்களாக மீள ஒப்படைக்கப்படவில்லை. Read more

university-studentயாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். Read more

ritaஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக கண்காணிக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பிலும், பரிந்துரைகள் தொடர்பிலும் இங்கு அவர் தெளிவுபடுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா குறுங்கால மற்றும் நீண்ட காலத்திற்கான பரிந்துரைகளை முன்வைத்தார். Read more

ssssயாழ்.போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலைமீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த 68 பேரும் உயிரிழந்தனர். Read more

student-deadயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். Read more