யாழ். தெல்லிப்பழை பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு பாடசாலையின் பொன்னையா கலையரங்கில் பாடசாலையின் அதிபர் திரு. கதிரேசு பத்மநாதன் அவர்களின் தலைமையில் இன்று (01.12.2016) வியாழக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. மாணிக்கம் ஆனந்தகுமார் (கோட்டக்கல்வி அலுவலர், தெல்லிப்பழை கோட்டம்), திரு. சிவப்பிரகாசம் துர்க்கானந்தன் (பழைய மாணவர், நில அளவையாளர் -மன்னார்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசியுரையினை பிரம்மஸ்ரீ ம.மகேந்திரசர்மா (பிரதமகுரு, வரத்தலம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்) அவர்கள் வழங்கினார். Read more