Header image alt text

ploteகழகத்தின் ஜேர்மன் நாட்டுக்குரிய புதிய நிர்வாகக்குழு தெரிவு-
கடந்த 01.11.2016 அன்று ஜேர்மனியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் முடிவில் கழகத்தின் எட்டாவது பொதுச்சபை கூட்டத்தின் முடிவுகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்ட ஜேர்மன் நாட்டுக்குரிய நிர்வாகக்குழுவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது.

Read more

saiva-pragasa-4யாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கடந்த இரு வருடங்களாக அதிபர் பதவி நிலையில் இருந்த திரு. நடராசா ரவீந்திரன் அவர்களின் பணி இடமாற்றம் தொடர்பாக மேற்படி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளது. அதிலே பாடசாலையில் பல அபிவிருத்திகளை முனைப்போடு மேற்கொண்டு வந்த அதிபரின் இடமாற்றம் மனவருத்தம் அளிப்பதாகவும், இவரே தொடர்ந்தும் அதிபராக பணியாற்ற வேண்டுமென்றும் மக்கள் சார்பாக வலயக் கல்விப் பணிப்பாளரின் மேலான கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. Read more

jjjjjjjjjjjjjjjj-3யாழ். புன்னாலைக்கட்டுவன் பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று புதுவருட தினமான 01.01.2017 அன்றிரவு திரு. கெங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதிலே புன்னாலைக்கட்டுவன் கிராமமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றிருந்தார்கள். புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். Read more

viyalendranஇன்னும் கால நீடிப்பினை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக துறையினர் மற்றும் வர்த்தக துறை மாணவர்கள் உட்பட பல்வேறு துறை மாணவர்களை இணைத்து மட்டக்களப்பு வர்த்தக ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more