Header image alt text

P1420066தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19-1/4 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு இன்றுமுற்பகல் நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
Read more

image-0-02-06-2385f724d2c740cfce9625aead960254300b0a838300909c99e65bf2402899fc-Vமட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் நேற்று 15.02.2017 புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். இக்கூட்டத்தின்போது கிராம மக்களினால் கிராமத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றில் மிக முக்கியமான விடயமாக குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இம் மக்களின் பாரிய பிரச்சினையாக குடிநீர் பற்றாக்குறை காணப்படுகின்றமை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. வறட்சி காலங்களில் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாலும், சுத்தமற்ற குடிநீரைப் பருகுவதால் பலவிதமான தொற்றுநோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் இதன்போது குறிப்பிட்டதுடன், இப்பிரச்சினைகளை பலரிடம் கூறியும் அதற்கான தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் வேதனையுடன் கூறினார்கள். Read more

P1420023தமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென கடந்த 31.01.2017 தொடங்கி இன்றுடன் 17ஆவது நாளாக தங்கள் 84 குடியிருப்புக் காணிகளுக்காக சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவருமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு மக்களை இன்றுகாலை புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், எங்களின் காணிகளை விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் எம்.சுவாமிநாதன் அவர்கள் அரசாங்க அதிபரின் ஊடாக ஒரு அறிவித்தலை கொடுத்திருந்தாலும், அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் எங்கள் காணிக்குள் கால் பதிக்கும்வரையில் போராடுவோம் என்று கூறினார்கள்.
Read more

gfgfgயாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை மாற்றி முன்னைய அதிபரான திரு. ந.இரவீந்திரன் அவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கையெழுத்திட்ட கடிதமொன்று வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடித்தில், எமது பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்ட பின்னர் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்கின்றனர். தரம் 5 வகுப்பிற்கான மேலதிக வகுப்புகள், செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. மாணவர்களுக்கு வரும் உலக உணவுத்திட்டப் பொருட்கள் மாணவர்கட்டு வழங்கப்படுவதைக் குறைத்து வேறு தேவைகட்டு பய்னபடுத்தப்படுகின்றது. தரம் 5ற்கான மேலதிக வகுப்பு எடுக்கும் ஆசிரியரை மேலதிக வகுப்பு எடுக்கவிடாது வெளித் தேவைகட்டு பயன்படுத்துகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

palanisamyதமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக இன்று அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை 4.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இரண்டு மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். Read more