Header image alt text

UNஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் பரோனெஸ் ஜோய்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

bவிடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா ஜோன் குலாஸ் அவர்களுக்கு 25,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் அரவை இயந்திரம் (கிறைண்டர்) ஒன்றையும், மருந்துப் பொருட்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.

மறைந்த கழகத் தோழர் ரமேஸ் (ஜோசெப் பேடினன்ட்) அவர்களின் தாயாரான அன்னம்மா, ஆயர்வேத வைத்தியம் செய்து வருபவர். இருதய நோயாளியான அவரது கணவர் ஜோன் குலாஸ் ஆயர்வேத மருந்து தயாரிப்பதில் இவருக்கு உதவியாக இருந்து வருகின்றார். முதலீடு இன்மையால் சிறிதளவில் வைத்தியம் செய்துவந்த இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.  Read more

sfdதமது பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், 3ஆவது நாளாக இன்றும் தொடர்கின்ற போதும், கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு, தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த நேற்று முன்தினம் காலை ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், அமைதியான முறையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more

russian helicoptersரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது. மலேசியாவில் இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த ரஸ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவையின் உதவி தலைவர் மிக்ஹெய்ல் பெட்டுவ்கொவ் இதனை தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உலங்கு வானூர்திகளுக்கு உதிரிபாகங்களை வழங்குவது உட்பட்ட பணிகளை இந்த நிலையம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது எம் ஐ 8-17ரக உலங்கு வானூர்திகள், 12 தாக்குதல் உலங்கு வானூர்திகள் 6, எம்.எம்.பி சண்டை உலங்கு வானூர்திகள் 2 மற்றும் சுமார் 50 துருப்புக்காவிகள் என்பன இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sri lanka pakistanஇலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரமர் நவாஷ் ஷெரிப் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான வர்த்தக முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் இப்டிகார் அஸிஸை சந்தித்தப்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

maithripalaரஷ்யாவு மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு பலமாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தொடர்ந்து உரையாற்றியுள்ள ஜனாதிபதி, தனது இந்த விஜயம் தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் கொள்கையை தெளிவாக எடுத்துக் காட்டுவதோடு, சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். Read more

sri lankaநேற்றுக்காலை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுன் பிரகாரம், உள்நாட்டு விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரியவருகின்றது.

இதற்கான அனுமதியின் பின் மேற்படி உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் பொல்கஹாவெல- குருநாகல் வரையிலும், அளுத்கமை -காலி பகுதிகளுக்கு, இரட்டை புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கும் 1.05 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று திட்டங்களுக்கும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. Read more

jail busகளுத்துறையில் சிறைச்சாலை பஸ்ஸின்மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தையடுத்து, சிறைச்சாலைகள மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், கேகாலை சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள், 0.7 மில்லியன் ரூபாய் செலவில், சிறைச்சாலை பஸ்ஸ_க்கு மாற்றீடாக, குண்டு துளைக்காத பஸ்ஸொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மற்றும் கைதிகள் ஐந்து பேர் என்று கொல்லப்பட்ட நிலையில், கைதிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கு, அமைச்சரால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டதையடுத்தே, இந்த பஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. Read more