Header image alt text

mahinda desapriya (3)மக்களுக்கு தேர்தல் தொடர்பிலும் பாராளுமன்றம் தொடர்பிலும் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான புதிய வாக்காளர்களின் பதிவுகள் கடந்தகாலத்தை விடவும் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது காலம் கடத்துவது ஜனநாயகத்தின் மீதான அத்துமீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

kilinochchi missing protest 01கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 35வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

pannankandy protest 01கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர். இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறே வாழ முடியாது. Read more

dilan pereiraஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய ஒருபோதும் தயார் இல்லை என சிறீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளது. வெகு விரைவில் கலப்பு அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். Read more

sdfgdsகிளிநொச்சி, நெத்தலியாறு பகுதியில் வெடிப்பொருள் கொண்ட பொதியொன்று நடு ஆற்றில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்ட இரகசியத் தவலையடுத்து, அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டிருந்தனர். அதனையடுத்து, குறித்த வெடிபொருளை மீட்பதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அதிலிருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

trainபுகையிரத கடவையில் படுத்திருந்தவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ் அரியாலை கிழக்கைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தார். Read more

chandrikaதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அமைச்சினால் முன்னேடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நேற்று யாழ். தெல்லிப்பளை வீமன்காமம் தெற்கு பகுதி மக்களின் நலனுக்கான சுகாதார நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அமைச்சின் தலைவியும், முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்துகொண்டு இந்த செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். Read more

maithriரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். மூன்று நாட்கள் ஜனாதிபதி ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பல கட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

60 வருட கால ரஷ்ய – இலங்கை உறவுகளை மேலும் முன்கொண்டு செல்வதற்கு நட்புறவு மற்றும் சுமூகநிலைமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

accident (3)மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில் சென்று கொண்டிருந்த எருமைமாடு ஒன்றுடனும். பின்னர் பனைமரம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளது. Read more

rice millமட்டக்களப்பு காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் வாயு வெப்பமாக்கி வெடித்ததினால் அதனை அண்மித்த பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக 25 இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.