Header image alt text

1mai zhதோழமை உணர்வுள்ள சுவிஸ்  வாழ்  தமிழ்மக்களே! கழகத்தோழர்களே! தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!
   
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2017 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.   Read more

ssவடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் இன்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது வரையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தனித்தனியாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களது தனித்தனியான போராட்டங்களுக்கு அரசாங்கம் பதிழலிக்காத நிலையில் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து ஒர் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரிதிநிதிகள் இன்றைய குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

sdசட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, மியர்மார் பிரஜைகள் 30 பேர் மற்றும் இரு இந்தியர்களுமே, கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.

சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த இவர்களை, பத்திரமாக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். கைதானோரில் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர். மேலும், அகதிகளாக சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜைகள் இந்தியாவுக்கு சென்றுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லுத்தினல் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார்.

sfd (2)நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராடி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 54ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக அறிவித்துள்ளனர். உழைக்கும் வர்க்கமாகிய தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தினத்தை கருப்பு தினமாக கொண்டாடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ssdவடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு அறவழிப் போராட்டத்திற்கு இன்று சாதகமான பதில் கிட்டியுள்ளது. இதற்கமைய, மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் 36 நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் முள்ளிக்குளம் கடற்படைத் தளத்தில் இன்று நடைபெற்றது. Read more

modi maithriஉத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக் -கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இந்தியப் பிரதமர், இலங்கை வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, Read more

north missing protestகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.

எனவே கடந்த பல வருடங்களாக அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமையுடன் 39ஆவது நாளாக தொடர்கின்றது. அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். Read more

w1சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயதின் வருடாந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு ழூங்கிலாஞ தெற்க்கு உடையார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த கடந்தகால யுத்தத்தின் போது தனது வலது காலை இழந்து அங்கவீனமுற்ற கோபாலன் கிருபாதேவி குடும்பத்தை தெரிவு செய்து 10000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு செய்துள்ளார். Read more

sithaன்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன்.

Read more

9a04இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர் Read more