இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள் இருவரும் தூதுவர்கள் இருவரும், ஜனாதிபதி இலத்தில் வைத்து, தங்களது நியமனக் கடிதங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றுகாலை கையளித்துள்ளனர்.
நேபாளம் (திரு. குஷ்டி நகுரா ஆர்டீயசா) மற்றும் இந்தோனேஷியா (திரு. பிஷ்வாம்பர் பியாகுர்யால்) ஆகிய புதிய தூதுவர்களும், மோல்டா இராச்சியம் (செல்வி ஜோஎனா மேரி கெம்ப்கெர்ஸ்) மற்றும் நியூசிலாந்து (திரு. ஸ்டீபன் போர்க்) ஆகிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு தங்களது நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.