Header image alt text

tyuyஇலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள் இருவரும் தூதுவர்கள் இருவரும், ஜனாதிபதி இலத்தில் வைத்து, தங்களது நியமனக் கடிதங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றுகாலை கையளித்துள்ளனர்.

நேபாளம் (திரு. குஷ்டி நகுரா ஆர்டீயசா) மற்றும் இந்தோனேஷியா (திரு. பிஷ்வாம்பர் பியாகுர்யால்) ஆகிய புதிய தூதுவர்களும், மோல்டா இராச்சியம் (செல்வி ஜோஎனா மேரி கெம்ப்கெர்ஸ்) மற்றும் நியூசிலாந்து (திரு. ஸ்டீபன் போர்க்) ஆகிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு தங்களது நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

rauf hakeemஎல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

paffrelஇரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதை போன்று இரட்டை பிரஜாவுரிமை பெற்று அரச சேவையில் நீடிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும்

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

ssபோதியளவு நீரினை பெற்றுக்கொள்ள முடியாமையால் யாழ்ப்பாணம் கப்பூது பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்த இடத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வடமராட்சி கப்பூது பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்ற போதிலும் பல வீடுகள் வெறுமையாகவே காட்சியளிக்கின்றன. Read more

accident (3)புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெறற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கீழ் இயங்கும் தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்கள சாரதி முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் தொகைமதிப்பு புள்ளி விவரத் திணைக்களத்துக்குச் சொந்தமான கெப் ரக வாகனம், எதிர்த்திசையில் வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  Read more